Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல் பதிலில் திருப்தியில்லை: நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்

ஏப்ரல் 23, 2019 09:35

டெல்லி: ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என நீதிமன்றமே கூறிவிட்டது என பிரச்சாரத்தில் கூறியது தொடர்பாக நேற்று உச்சநீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. மேலும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலேயே அப்படி பேசியதாகவும், வேறு எந்த நோக்கமும் இல்லை எனவும் ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி ராகுல்காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்